தேனினும் இனிய என் தாய்மொழியே கன்னித்தமிழே
தேனினும் இனிய என் தாய்மொழியே கன்னித்தமிழே கட்டிக்கரும்பே என் நாவினில் தினம் வந்து தவழ்வாய் பேச்சினில் இனிமை பொங்க செய்வாய். காலங்கள் ஆயிரம் கடந்து சென்றாலும் என் நினைவினில் நீங்காது நிற்கும் தமிழ்மொழியே உன் சொல் இனிதே அதன் பொருள் இனிதே உன் எளிமை இளமை தாய்மை தூய்மை கண்டு என் உள்ளமெல்லாம் துள்ளிக்குதிக்கின்றதே துள்ளி ஓடும் அந்த புள்ளி மான் போன்றே யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதில்லை என்றான் பாட்டுக்கொரு புலவன் பாரதி தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றார் பாரதிதாசன் தமிழின் பெருமையை உலகறிய வள்ளுவன் வடித்து வைத்த திருக்குறள் ஐம்பெருங் காப்பியங்களான சிலப்பதிகாரம் மணிமேகலை சீவகசிந்தாமணி குண்டலகேசி வளையாபதி போன்ற நூல்களெல்லாம் அள்ளி அள்ளி தருகிறது உன் இனிமையை ... இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கி கொண்டிருக்கிறான் என்று கல்லறையில் எழுதி வைக்கச் சொல்லி மறைந்தார் மேலைநாட்டு அறிஞன் ஜி யு போப். இப்படி மேலை நாடுகளெல்லாம் கொண்டாடி மகிழும் தமிழ் மொழியை தாய்மொழியாக பெற்றது நம் பெரும் பேறு அம்மா என்று அழகு...